பாடசாலைகளுக்கு நூல்கள் கையளிப்பு
‘மலையகம் பல்பக்க பார்வை’ , ‘இலங்கையில் பெருந்தோட்டசமுதாயம்’ , ஆகிய இரு நூல்களை மலையநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சினூடாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (19) ஹட்டன் பூல்பேங்க் தொழில்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது .
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம் திலகராஜ் மற்றும் மலைநாட்டு அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர் வாமதேவன், அமைச்சின் செயலாளர் கலாநிதி பெ, சுரேஸ், விரிவுரையாளர் கலாநிதி ரமேஸ் ஆகியோர் கலந்துகொண்டு, நூல்களை வழங்கிவைத்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம் கிருஸ்ணா