மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு இனி இல்லை! விசேட அறிவிப்பு இணைப்பு!
2019 ஜனவரி முதலாம் திகதி முதல் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு மாத்திரமே வழங்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அரச தகவல் திணைக்களத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் ‘மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம்’ செல்லுபடியான கடவுச்சீட்டு 2018.12.31 வரை விநியோகிக்கப்படும்.
2019.01.01 முதல் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு மாத்திரமே வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.