தேர்தல் பணிப்பாளர் நாயகமாக மொஹமட் நியமனம்!
தேர்தல்கள் பணிப்பாளர் நாயகமாக எம்.எம். முஹம்மத், (29) வியாழக்கிழமை பதவியேற்றுள்ளார்.
இதுவரை காலமும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதித் தேர்தல்கள் ஆணையாளராக பதவி வகித்து வந்த முஹம்மத், வியாழக்கிழமை முதல் தேர்தல்கள் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் திணைக்களத்தில் நீண்ட காலமாக பல பதவிகளை வகித்து வந்த முஹம்மத், கம்பஹா மாவட்டத்தின் நிட்டம்புவ – கஹட்டோவிட்ட பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவராவார்.
வரலாற்றில் முதற்தடவையாக இப்பதவிக்குத் தெரிவாகியுள்ள முதல் முஸ்லிம் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.