“சுமந்திரனின் சொல்லு ரணிலின் மூச்சு!” – தேர்தலை வலியுறுத்தி மஹிந்தவின் ஆதரவாளர்கள் யாழில் பேரணி

நாடாளுமன்றத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்தப் பேரணி கஸ்தூரியார் வீதிச் சந்தியில் ஆரம்பித்து யாழ்ப்பாணம் பஸ் நிலையம் வரை சென்றது. பின்னர் அங்கு நாடாளுமன்றத் தேர்தலை வலியுறுத்திக் கவனயீர்ப்புப் போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “சுமந்திரனின் சொல்லு ரணிலின் மூச்சு”, “நல்லாட்சி அரசு போகட்டும் மக்கள் ஆட்சி வேண்டும்”, “மக்கள் தீர்ப்புக்கு வழிவிடுங்கள்”, “தேர்தல் நடத்த ஏன் பயம்?” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *