மஹிந்தவின் சர்வாதிகாரத்துக்கு எதிராக மஹரகமவில் இன்று ஜே.வி.பி. போராட்டம்!
ஜனநாயகத்தை வெற்றிக்கொள்ளும் தொனிப்பொருளின் கீழ் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்று மஹரகம நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள மஹிந்த அணியினரின் சர்வாதிகாரத்தைத் தோற்கடித்து, ஜனநாயகத்தை வெற்றிக்கொள்வதற்கான இந்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.