அரசியல் குழப்பத்தால் இலங்கைக்கு அடிக்குமேல் அடி – IMF நிதியும் இடைநிறுத்தம்

இலங்கையில் அரசியல் குழப்பம் உச்சம் தொட்டு பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கான நிதியுதவியை இடைநிறுத்துவதற்கு சர்வதேச நாணயநிதியம் (ஐ.எம்.எப்.) தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான பேச்சாளர் ஹெரி ரைஸ் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
‘ இலங்கையின் அரசியல் நிலை குறித்து மேலதிக தெளிவு ஏற்படும் வரை நாங்கள் நிதியுதவியை இடைநிறுத்தியுள்ளோம் .” என்றும் அவர் கூறினார்.  சர்வதேச நாணயநிதியத்தின் இந்நடவடிக்கையால் இலங்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

2016 ம் ஆண்டு சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு 1.5 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு இணங்கியிருந்தது.முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என்ற நிபந்தனைகளின் கீழ் சர்வதேச நாணயநிதியம் இந்த நிதியுதவியை வழங்கியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *