அரசியல் குழப்பத்தால் இலங்கைக்கு அடிக்குமேல் அடி – IMF நிதியும் இடைநிறுத்தம்
இலங்கையில் அரசியல் குழப்பம் உச்சம் தொட்டு பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கான நிதியுதவியை இடைநிறுத்துவதற்கு சர்வதேச நாணயநிதியம் (ஐ.எம்.எப்.) தீர்மானித்துள்ளது.
2016 ம் ஆண்டு சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு 1.5 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு இணங்கியிருந்தது.முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என்ற நிபந்தனைகளின் கீழ் சர்வதேச நாணயநிதியம் இந்த நிதியுதவியை வழங்கியிருந்தது.