மைத்திரியுடனான இன்றைய சந்திப்பைப் புறக்கணிக்க கட்சித் தலைவர்கள் முடிவு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய காலைச் சந்திப்பை புறக்கணிக்க ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
நாடாளுமன்றில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்த ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், ஜே.வி.பியின் தலைவர் ஆகியோரை இன்று காலை சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரி அழைத்திருந்தார்.
அதேசமயம் ,நேற்று நாடாளுமன்ற தீர்மானங்கள் தொடர்பில் விளக்கி சபாநாயகர் அனுப்பிய கடிதத்தை ஜனாதிபதி மைத்திரி நிராகரித்து நேற்றிரவு கடுமையான பதில் கடிதமொன்றை வழங்கியிருந்தார்.
இதனையடுத்து நேற்றிரவு கூடிய ஐக்கிய தேசிய முன்னணி பங்காளி கட்சித் தலைவர்கள் , ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்புக்கு செல்வது அர்த்தமற்றதென்பதால் அதனைப் புறக்கணிக்கத் தீர்மானித்தனர்.
நிறைவேற்று அதிகாரத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையிலான நெருக்கடி தொடர்கின்றது.