மைத்திரிக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!
நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்தமைக்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என வெளியிடப்பட்ட பிரகடனம் அரசமைப்புக்கு விரோதமானது, சட்டபூர்வமானதல்ல என்பதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களின் கருத்து என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்துக்குச் செல்லாது என்று ஆணைக்குழுவின் தலைவரான மஹிந்த தேசப்பிரிய கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.