கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு! ஹக்கீம் – ரிஷாத் மக்காவில் பேச்சு!!

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவை பெறுவதற்காக மைத்திரி – மஹிந்த கூட்டணி கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுவருகின்றது.


இவ்விரு கட்சிகளும் புதிய அரசுக்கு ஆதரவளிக்கும் என்று எஸ்.பி. திஸாநாயக்க இன்று அறிவித்தார்.

இவ்வாறானதொரு பின்புலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் மக்காவில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவூப் ஹக்கீம் தலைமையிலான மு.கா. எம்.பிக்களுக்கும், ரிசாட் பதியுதீன் தலைமையிலான அ.இ.ம.கா. எம்.பிக்களுக்குமிடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளதை ரிசாட் பதியுதீன் உறுதிப்படுத்தியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் படத்தையும் பிரசுரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *