இலங்கை பௌத்த நாடு – மூவேளை உணவே முக்கியம்! முரளியின் கருத்துக்கு கோட்டா புகழாரம்!!

இலங்கை பௌத்த நாடு என்றும், ஜனநாயகத்தைவிட மக்களுக்கு மூவேளை உணவே முக்கியம் என்றும் கருத்து வெளியிட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சூழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு கோட்டாபய ராஜபக்ச புகழாரம் சூட்டியுள்ளார்.


பி.பி.சி. சிங்கள சேவைக்கு முரளி வழங்கிய நேர்காணலின்போது முரளி வெளியிட்ட கருத்துகளை பாராட்டி டுவிட்டரில் கோட்டாபய பதிவிட்டுள்ளார்.

“அனைத்து அரசியல்தலைவர்களும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் பாடுபடவேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் விதத்தில் முரளிதரனின் கருத்து அமைந்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *