மஹிந்த – சம்பந்தன் இன்று நேரில் பேச்சு!
புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை நேரடிச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
கூட்டமைப்பின் இன்றைய நாடாளுமன்றக் குழுக் கூட்டத்துக்கு முன்னதாக இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று இரா.சம்பந்தன் ‘புதுசுடர்’ இணையத்தளத்திடம் தெரிவித்தார்.
பிரதமராகப் பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்தார். இதன்போது கூட்டமைப்பின் இரண்டு நிபந்தனைகளையும் (புதிய அரசமைப்பை நிறைவேற்றுதல், ஐ.நா. தீர்மானத்தை அமுலாக்குதல்) சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் நேரில் சந்தித்துப் பேசுவதற்குத் தயாராக இருப்பதாக மஹிந்த தெரிவித்திருந்தார்.
அதற்கமைய, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று காலை சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் தொடர்பில் பேசப்படும் என்று இரா.சம்பந்தன் மேலும் கூறினார்.