கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் இன்று பிற்பகல் கைதுசெய்யப்பட்ட பெற்றோலிய வளத்துறை முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க எம்.பி. பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரை, கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.