தொடர்கின்றது மைத்திரியின் வேட்டை! ரணிலின் பாதுகாப்பிலும் வெட்டு!! – 1,008 பேர் 10 ஆகக் குறைப்பு
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் பதவியை அவர் வகித்தபோது 1,008 பாதுகாப்பு அதிகாரிகள் அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும், அது தற்போது 10 அதிகாரிகள் வரையில் குறைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.
பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கிணங்க பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் கட்டளையின் அடிப்படையிலேயே இவ்வாறு பாதுகாப்பு அதிகாரிகள் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.