எதிர்வரும் 15 ஆம் திகதி வரையான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு!

நேற்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர் வரும் 15ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு புதிய சுகாதார வழிகாட் டல்கள் சுகாதார அமைச்சால் வெளி யிடப்பட்டுள்ளன.

இதற்கமைய குடும்ப உறுப்பினர் கள் மற்றும் சக பணியா ளர்களுக்கு நோய் பரவும் அபாயத்தைக் குறைக்கும் வகையில், தேவை யில்லாமல் வீடுகளை விட்டு வெளியேறுவ தைத் தவிர்க்குமாறு சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் எஸ். சிறீதரன் அறிவித்துள்ளார்.

திருமண மண்டபங்களில் அவற்றின் திறனில் மூன்று ஒரு பங்குக்கு மிகாமல் அதிகபட்சம் 200 பேருக்கு மிகாமல் திருமண வைபவங்களை நடத்த முடியும். திறந்தவெளி எனின், 250 பேர் அனுமதிக்கப்படுவர்.

உணவகங்களில்  அவற்றின் திறனில்  மூன்று ஒரு பங்குக்கு மிகாமல் அதிக பட்சம் 100 பேர் உள்ளிருந்து உணவருந்த அனுமதிக்கப்படுவர். திறந்த வெளியாயின் 150 பேர் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *