பொய்யுரைக்கும் மைத்திரி ஒருபோதும் தப்பிவிட முடியாது! – காலம் விரைவில் பதில் சொல்லும் என அகிலவிராஜ் எச்சரிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கு மக்களுக்காக நேற்று மாலை ஆற்றிய விசேட உரையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீதும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மீதும் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பொய்களை உரைப்பதன் மூலம் ஒருபோதும் தப்பிவிட முடியாது எனவும், காலம் விரைவில் அவருக்கு பதில் சொல்லும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சரியான பதில், ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்பவற்றை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *