நாடாளுமன்றத்தை உடன் கூட்டுக! – மைத்திரிக்கு அமெரிக்கா அழுத்தம்

இலங்கை நிலவரங்கள் குறித்து கரிசனையுடன் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ள அமெரிக்கா, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் அழுத்தம் கொடுத்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஹீதர் நுவேட் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் நிலவரங்களை அமெரிக்கா தொடர்ந்தும் கரிசனையுடன் கவனித்து வருகின்றது.

நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகருக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

யார் அரசுக்குத் தலைமையேற்பது என்பதை உறுதி செய்யும் பொறுப்புக்களை நிறைவேற்ற, இலங்கை மக்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை அனுமதிக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *