தொடர்கிறது மைத்திரியின் அதிரடி – அரச தகவல் திணைக்களத்துக்கும் புதியவர்!
அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் நாலக்க கலுவெவ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுப்படி உடனடி அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான எஸ் அமரசேகர பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இவர் முன்னாள் பிரதமர் டி.மு.ஜயரட்னவின் செயலாளராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.