முந்தியடித்துக்கொண்டு மஹிந்தவுக்கு வாழ்த்துக் கூறியது சீனா!

புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை, சீன தூதுவர் சென் யுவான் இன்று மாலை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன் போது, சீன அரசாங்கத்தின் வாழ்த்துச் செய்தியை அவர் மகிந்த ராஜபக்சவிடம் கையளித்துள்ளார்.

நேற்று மாலை மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலாவது வெளிநாட்டுத் தூதுவர் இவராவார்.

மஹிந்த ஆட்சியின்போது சீனாவானது இலங்கையில் ஆழமாக காலூன்றுவதற்கு முயற்சித்தது. நாட்டின் முக்கிய இடங்கள் சீனாவுக்கு வழங்கப்பட்டன என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *