‘ இனி அந்த மாதிரியான படங்களில் நடிக்க மாட்டேன்’ – கவர்ச்சிக்கு குட்பாய் சொல்கிறார் யஷிகா
இனிமேல் அடல்ட் (இரட்டை அர்த்தம் கொண்ட) படங்களில் நடிக்கமாட்டேன் என்று ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ நாயகி யாஷிகா அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற அடல்ட் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை யாஷிகா. இப்படத்தைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனுக்ககான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்கிடையில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் நடித்துக் கொண்டிருந்த யாஷிகா, பிறகு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தால் நோட்டா படத்தில் வெறும் 3 காட்சிகளில் மட்டும் நடித்து கொடுத்துவிட்டு சென்று விட்டாராம்.
‘நோட்டா’ படத்தில் யாஷிகாவிற்கு ஒரு வெயிட்டா கேரக்டர் ரோல் கொடுக்கப்பட்டது. ஆனால் அதனை வேண்டாமென்று ஆனால் அதனை வேண்டாமென்று பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார்.
‘இருட்டறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்து பிரபலமான அவர் இனிமேல், அந்த மாதிரியான படங்களில் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். அரசியல் சம்பந்தப்பட்ட படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். தனது உண்மையான முகத்தை காட்டவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக யாஷிகா கூறியுள்ளார்.