கிழக்கு ஆசிரியர்களின் இடமாற்றங்கள் திடீரென இடைநிறுத்தம்! – ஆளுநர் அதிரடி

கிழக்கு மாகாணத்தில், ஆசிரியர்களின் நிரந்தர, தற்காலிக இடமாற்றங்கள் அனைத்தும், எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரைக்கும் இடைநிறுத்தப்பட்டுள்ளனன என்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும், சுற்றுநிருபத்துக்கு அமைவாக, மகப்பேற்றுக் காலம் வரையிலான இடமாற்றங்கள் மட்டும் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் பணிப்புரைக்கு அமைவாக இடைநிறுத்தப்பட்டுள்ள இந்த இடமாற்றங்கள் குறித்து, கிழக்கின் அனைத்து இடங்களிலும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சால் விளம்பரப் பதாகைகள் ஒட்டப்பட்டுள்ளன.

(அப்துல் சலாம் யாசீம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *