சமந்தாவை சுற்றிவளைத்த இரசிகர்கள்
நடிகை சமந்தா திருமணத்திற்கு பின்பும் தற்போது பிசியாக இருக்கிறார் என்றே சொல்லவேண்டும். அண்மையில் அவர் நடிப்பில் யு டர்ன் படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வசூலையும் எடுத்து ஹிட்டானது.
அதே நாளில் சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்திருந்த சீமராஜா படமும் வெற்றி பெற்றது. இதனால் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார். தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மதுரையில் செல்போன் ஷோரூம் ஓன்றில் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அங்கு அவரை காண ரசிகர்கள் கூடினர். இதனால் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.