சம்பந்தனின் குலதெய்வக் கோயிலில் ஐ.நா. அதிகாரி விசேட வழிபாடு!
திருகோணமலை காளி கோயிலுக்குச் சென்றுள்ளார் ஐ.நா. உயர் அதிகாரியும் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதியுமான ஹனா சிங்கர் அம்மையார்.
தமிழர்களுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கவேண்டிய தலைமைத்துவத்தைக் கொண்ட சம்பந்தன் ஐயாவின் குலதெய்வக் கோயில் இது.
தமிழர்களுக்குத் தீர்வை முன்னின்று வழங்கவேண்டிய ஜனாதிபதி கூட இரு வாரங்களுக்கு முன்னர் இங்கு சென்றிருந்தார். இப்போது ஹனா அம்மையார் அங்கு சென்று வழிபட்டுள்ளார்.