கொழும்பில் பயங்கரம்! – பெண் சுட்டுக்கொலை

கொழும்பு புறநகர் பகுதியில் வைத்து இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

ஜாஎல – வெலிகம்பிடிய சந்தியில் மோட்டார் காரில் பயணித்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த இனந்தெரியாத நபர்கள் துரத்திச் சென்று துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் குறித்த பெண் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் எனவும், எனினும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

உயிரிழந்த பெண் கந்தான பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

குறித்த பெண் இலக்கு வைக்கப்படவில்லை என்றும் மற்றுமொரு நபரே இலக்கு வைக்கப்பட்டார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது. பிறிதொரு நபர் பயணித்த வாகனம்மீது சூடு நடத்துவதாக நினைத்தே குறித்த பெண் பயணித்த வாகனம் மீது சூடுநடத்தப்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *