நவம்பரில் சீனா பறக்கின்றார் மைத்திரி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் அவர் அங்கு செல்கின்றார்.
சீன சர்வதேச ஏற்றுமதி கண்காட்சியில் அதிதியாக கலந்துகொள்ளவே அவர் அங்கு செல்கின்றார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பயணத்தின்போது சீன நாட்டின் முக்கிய பிரமுகர்களையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.