புறக்கோட்டையில் வெளிநாட்டுக் கைக்குண்டுகள் மீட்பு! – சூத்திரதாரியும் மடக்கிப் பிடிப்பு
கொழும்பு, புறக்கோட்டை, பெஸ்ட்டியன் மாவத்தையில் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 2 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலையேற்பட்டது.
மொனராகலை பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும், அவர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைக்குண்டுகள் மீட்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் இறங்கியதுடன், கைதான நபரிடம் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.