இலங்கையில் குணமடைந்து பெண்ணுக்கு மீண்டும் கொரோனா!
கொரோனா வைரசினால் பீடிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு மீண்டும் வைரஸ் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அனுராதபுரம் கெப்பதிகொல்லேவ பகுதியை சேர்ந்த 38 வயது பெண் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் குவைட் நாட்டிலிருந்து வந்த நிலையில்,அவருக்கு கொரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டது.
இதனை அடுத்து அவர் நேற்று கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.