இலங்கையில் குளுக்கோமா நோயாளிகள் அதிகரிப்பு

உலக தரவு பகுப்பாய்வு அறிக்கைகளின்படி, இலங்கையில் குளுக்கோமா பாதிப்பு 5 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

உலக அளவில் இந்த நிலை 3.54 சதவீதமாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு, மார்ச் 10 முதல் 16 வரை குளுக்கோமா வாரம் என்று அறியப்படுகிறது, மேலும் இந்த ஆண்டின் கருப்பொருள் குளுக்கோமா இல்லாத உலகத்திற்காக ஒன்றுபடுவோம் என்பதாகும்.

50 வயதுக்கு மேற்பட்டவர்கள்

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்றும், குறிப்பாக தங்கள் குடும்பத்தில் யாருக்காவது அல்லது உறவினர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

இலங்கையில் குளுக்கோமா நோயாளிகள் அதிகரிப்பு | An Increase In Glaucoma Patients

குளுக்கோமாவை இனங்காணுவதன் மூலம் குருட்டுத்தன்மையை தடுக்க முடியும் எனவும் உலகளவிலும் இந்நாட்டிலும் குருட்டுத்தன்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று குளுக்கோமா எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இலங்கையில் குளுக்கோமா நோயாளிகள் அதிகரிப்பு | An Increase In Glaucoma Patients

இதனடிப்படையில், நாடளாவிய ரீதியில் உள்ள கண் சிகிச்சை நிலையங்கள், காலி, புத்தளம், பதுளை, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நோயாளர்களுக்கு வைத்தியர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதுடன் குளுக்கோமா விஷேட கண் மருத்துவ மனைகளை நடத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *