DNA சோதனைக்கு பின்னரே திருமணத்திற்கு அனுமதி., ஜோடிகளுக்கு புதிய விதி
ரஷ்யாவில் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற தம்பதிகள் மரபணு இணக்கத்தன்மை சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற புதிய விதி வரவுள்ளது.
ரஷ்யாவில் உள்ள பாஷ்கார்டோஸ்தான் குடியரசில் (Republic of Bashkortostan) மருத்துவர்கள் புதிய பரிந்துரைகளை முன்வைத்து வருகின்றனர்.
திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஜோடிகளுக்கு முதலில் மரபணு இணக்கப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
ஆரோக்கியமான குழந்தைகளுக்கு மரபணு சோதனை அவசியம் என்று முடிவு செய்யப்பட்டது.
பாஷ்கிர் மாநில சுகாதாரத் துறையின் தலைவர் Salavat Kharasov இது குறித்து விளக்கம் அளித்தார்.
திருமணம் செய்யப்போகும் தம்பதிகள் கண்டிப்பாக DNA சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், மரபணு பரிசோதனை ஊக்குவிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த செயல்முறையால் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
குழந்தை ஏதேனும் குறைபாட்டுடன் பிறந்தால், அது மரபணு பிரச்னையாக இருக்கும் என்றும், இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க மரபணு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் Kharasov கூறினார்.
இது பெற்றோருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என மாநில தொழிலாளர் துறை அமைச்சர் லீனாரா இவனோவா தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25,000 குழந்தைகள் மரபணு நோய்களுடன் பிறக்கின்றன.
இந்த சூழலில் மரபணு நோய்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது. அவற்றில் 36 மரபணு நோய்கள் சுட்டிக்காட்டப்பட்டன.