இந்தியப் பெருங்கடலில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலில் இன்று காலை 8 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.0 ரிக்டர் அளவுகளில் குறித்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இன்றைய தினம் நிலநடுக்கம் ஏற்பட்ட நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும். இதன்படி முன்னதாக 4.8, 5.2 மற்றும் 5.8 ரிக்டர் அளவுகளில் மூன்று சந்தர்ப்பங்களில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் இந்திய பெருங்கடலின் மாலைதீவுக்கு அருகில் பதிவாகியுள்ளது. இருப்பினும், இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் விடுக்கப்படவில்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *