அதிவேக நெடுஞ்சாலையில் இன்று இலவசமாக பயணிக்கலாம்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிவேக நெடுஞ்சாலை பணியாளர்களினால் சுகயீன விடுமுறை அறிவிக்கப்பட்டு தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் கடமையாற்றும் சுமார் 11,000 பணியாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை ஊழியர் சங்கத்தின் தலைவர் யோஹான் ஹசித முனசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இவ்வாறு சுகயீன விடுமுறையை அறிவித்து, பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அதிவேக நெடுஞ்சாலையில் இராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும், பற்றுச்சீட்டுகளை வழங்கப்படவில்லை எனவும் கட்டணம் வசூலிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில்களில் கட்டணம் செலுத்த வேண்டாமென ஐக்கிய பொதுச் சேவை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.