ஒரு நாளைக்கு 3 கிலோ இறைச்சியை உண்ணும் மிகப்பெரிய நாய்

இங்கிலாந்தின் மிகப்பெரிய நாய் ஒன்று சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகின்றது.

7 அடி 2 அங்குலத்திற்கு வளர்ந்திருக்கும் குறித்த நாய், ஒரு குட்டி யானைக்கு நிகரான எடையுடன் வளர்ந்திருப்பதாக வர்ணிக்கப்படுகிறது.

இரண்டு வயதான அபு என அழைக்கப்படும் குறித்த நாய், ஒரு நாளைக்கு 3 கிலோ இறைச்சியை உண்கிறது.

அதில் ஒரு முழு கோழி, மூன்று முழு கானாங்கெளுத்தி, இரண்டு முட்டைகள் மற்றும் பச்சை நாய் உணவு உட்பட பல சத்தான உணவுகளை உண்பதாக அதன் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதன் உணவுக்கு ஒரு நாளைக்கு 11 ஈரோக்கள் செலவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது ஆண்டுக்கு 4,000ஈரோக்களுக்கும் சற்று அதிகமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *