இஸ்ரேல்-காசா போரில் 11 ஊடகவியலாளர்கள் உயிரிழப்பு

இஸ்ரேல்-காசா போரில் 11 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒன்பது பாலஸ்தீனியர்கள், ஒரு லெபனானியர் மற்றும் ஒரு இஸ்ரேலியர் என்ற அடிப்படையில் அடங்குவதாக ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பதற்கான சர்வதேச குழு தெரிவித்துள்ளது.

ஒரு இஸ்ரேலிய ஊடகவியலாளர் காணாமல் போயுள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பதற்கான சர்வதேச குழு கூறியுள்ளது.

காசாவில் அல்லது அதற்கு அருகாமையில் கொல்லப்பட்ட, காயமடைந்த மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் பற்றிய மேலதிக தகவல்களை இந்தக் குழு சேகரித்து வருகிறது.

நேற்று வெள்ளிக்கிழமை, லெபனானில் ஷெல் தாக்குதலுக்கு மத்தியில் ராய்ட்டர்ஸின் காணொளி பதிவாளர் கொல்லப்பட்டுள்ளார். குறைந்தது ஆறு ஊடகவியலாளர்கள் நேற்று மாத்திரம் காயமடைந்துள்ளதாகவும் குறித்த குழு தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவின் மத்திய கிழக்கிற்கான ஒருங்கிணைப்பாளர் ஷெரிப் மன்சூர், காசாவில் உள்ள ஊடகவியலாளர்கள் தங்கள் குடும்பங்களை வெளியேற்றுவதற்கும் பாதுகாப்பதற்கும் முயற்சிக்கின்றனர்.

பலர் தங்கள் வீடுகளையும் அலுவலகங்களையும் இழந்துள்ளனர், மேலும் சிலர் மருத்துவமனையில் உள்ளனர். இங்கு மின்சாரம் மற்றும் இணையத்தைப் பெறக்கூடிய ஒரே இடமாக வைத்தியசாலை உள்ளதால் அங்கு பலர் தஞ்சமடைந்தும் உள்ளனர்“ – எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (ஒக்டோபர் 7) அன்று ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் காசா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் தற்போதுவரை 447 குழந்தைகள், 248 பெண்கள் உட்பட 1,417 பேர் உயிரிழந்துள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருதரப்பிலும் அதிகளவான உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *