இலங்கை சிறுமி அசானியின் திறமையை பார்த்து வியந்த நடிகை சினேகா!

சரிகமப நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகை சினேகா இலங்கை சிறுமி அசானியின் வளர்ச்சியை பார்த்து வியந்து பாராட்டியிருந்தார்.

சனிக்கிழமை ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியில் கனிஷ்கா மற்றும் அசானி இணைந்து “அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்” பாடலை பாடினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு நடிகை சினேகா சிறப்பு விருந்தினராக வருகை தந்து சிறுவர்களின் பாடல்களை ரசித்திருந்தார்.

இலங்கை சிறுமி அசானியின் பாடலை கேட்ட அவர்,

“உங்களுடைய பாடலை நான் கேட்டு இருக்கின்றேன். இந்த நிகழ்ச்சிக்கு பாதியாக தான் வந்தீர்கள் தற்போது உங்கள் திறமையை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது என்று கூறினார்”

மேலும், ஆரம்பத்தில் அசானிக்கு தடுமாற்றம் இருந்தாலும், கற்று கொண்டு முன்னேறி வருகின்றார்.

அவர் வெற்றி பெற வேண்டும் என்று பலரும் வாழ்த்தி வரும் நிலையில், இந்த வாரம் அவர் பாடிய “அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்” காணொளயையும் இணையவாசிகள் வைரலாக்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *