தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சருடன் வெங்கடேஷ்வரன் சந்திப்பு

 

தென்னிந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஷ்வரன், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாக ராஜனை (PTR) சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் அண்மையில் சந்தித்தார்.

சந்திப்பின் போது, பிரதி உயர்ஸ்தானிகர் இலங்கையில் முதலீடு வாய்ப்புகளை ஆராய்வதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

குறிப்பாக இலங்கை கணிசமான ஆற்றலைக் கொண்ட தொழில்நுட்பத் துறையில். மேலும், இலங்கையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது குறித்தும் கலந்துரையாடினர்.

பிரதி உயர்ஸ்தானிகர், அமைச்சர் மற்றும் தமிழ்நாட்டின் தூதுக்குழுவினரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

சாத்தியமான முதலீடுகளுக்காக தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள இலங்கை சகாக்களுடன் தொழில்நுட்பமட்ட கலந்துரையாடல்களை நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *