இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் ஒரே மேசையில்!

சீன மக்கள் குடியரசின் 74வது தேசிய தினம் நேற்று (28) கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதிகள் தற்போது பல்வேறு கருத்து வேறுபாடுகளில் ஈடுபட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *