தர்கா நகர் ஸாஹிரா மஹா வித்தியாலயத்தில் நடைபெற்ற மீலாதுன் நபி விழா!
இன்று புதன்கிழமை 27/ 09/ 2023 தர்கா நகர் ஸாஹிரா மஹா வித்தியாலயத்தின் நளீம் ஹாஜியார் மண்டபத்தில் மேற்படி கல்லூரியின் மீலாத் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீலாத் நபி போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கும் வைபவம் பாடசாலை அதிபர் திருமதி நஸ்ரின் அஸ்கர் தலைமையில் காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 12.00 மணி வரை மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
மேற்படி நிகழ்வுகளுக்கு அனுசரணையாளராகவும், பிரதம அதிதியாகவும் தர்கா நகர் இஸ்லாமிய நலம்புரிச் சங்கத்தின் தலைவரும், ஸூஹைர் ஹஜ் டிரவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான தேசபந்து அல்ஹாஜ் ஏ. பீ. எம். ஸூஹைர் ஜே. பி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
பாடசாலை பிரதி அதிபர்களான முஹம்மது ஸஃப்வான், திரு. ஸில்வா மற்றும் உப அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஹஸன் நூர் மற்றும் உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பாடசாலை நலம்புரிச் சங்க உறுப்பினர்கள், மீலாத் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் கலந்து சிறப்பித்தார்கள்.