மலேசியாவில் 3 இலங்கையர்கள் படுகொலை
மலேசியாவில் இலங்கையர்கள் மூவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை அந்நாட்டு பொலிஸார் தேடி வருகின்றனர்.
நேற்றிரவு கொலைச் சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில் அதற்கான காரணங்கள் இதுவரை வெளியாவில்லை.
எனினும் அவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.