புதிய மத்திய வங்கிச் சட்டம் இன்று முதல் அமுல்
புதிய மத்திய வங்கிச் சட்டம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
புதிய சட்டத்தின்படி, இலங்கை மத்திய வங்கியின் (CBSL) பணத்தை அச்சிடுவதற்கான திறன் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்றும் பதில் நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு அல்லது உலகளாவிய சுகாதார நெருக்கடி போன்ற சிறப்பு சூழ்நிலைகளில் மட்டுமே பணம் அச்சிட அனுமதிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.