சசித்ர சேனாநாயக்க கைது
பணத்துக்காக போட்டி நிர்ணயம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்க இன்று (06) காலை விளையாட்டு ஊழல் தடுப்பு பொலிஸ் பிரிவில் சரணடைந்துள்ளார்.
சசித்ர தனது சட்டத்தரணிகளுடன் சுகததாச விளையாட்டு வளாகத்தில் அமைந்துள்ள பிரிவுக்கு வந்திருந்தார்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.