கோர விபத்து பலர் வைத்தியசாலையில் அனுமதி!
தனோவிட்ட – கம்புரதெனிய பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று (26) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தும், கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.