இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் ஏற்படும் பாதிப்பு!

மனிதனுக்கு சராசரியாக 6 முதல் 8 மணி நேரங்கள் தூக்கம் அவசியமாகிறது. ஆனால், தற்போதுள்ள சூழலில் பலர் சரியான தூக்கமில்லாமல் இருக்கின்றனர். தொடர்ந்து துக்கமில்லாமல் இருப்பதால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். அவை என்னென்ன என்று பார்போம்.

6 முதல் 8 மணி நேரம் தூக்கமில்லாமல் இருப்பவர்களுக்கு மூட் ஸ்விங்ஸ் எனப்படும் தீவிர மனநிலை மாற்றங்கள் பொதுவானவை . இதனால், எரிச்சல், கோபம், சோர்வு , கவனசிதறல் போன்றவை ஏற்படும்.

மனநலத்தில் பாதிப்பு :

சரியான தூக்கம் இல்லை என்றால் ஒருவர் மன ஆரோக்கியம் சீர்கெடும். சரியாக தூங்கவில்லை எனில் க்ளினிக்கல் டிப்ரஷன் போன்ற மனநிலைக் கோளாறுகள் ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்பு:

தூக்கமின்மை உங்களில் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கும். ஒருவர் தூங்கும் போது தான் நோயெதிர்ப்பு அமைப்பு ஆன்டிபாடிகள் மற்றும் சைட்டோகைன்கள் போன்ற பாதுகாப்பு, தொற்று-எதிர்ப்புகளை உற்பத்தி செய்கிறது அதனால், நோய் எதிர்ப்பு மண்டலம் சரியாக செயல்பட தூக்கம் அவசியம். அதே போல தூக்கமின்மை உடலுறவின் மீதான் ஆர்வத்தை குறைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *