விரைவில் IMFஇன் இரண்டாவது கடன் தவணை இலங்கைக்கு
விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை கிடைக்கப்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை நடாத்தும் முதலாவது மீளாய்வு செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ளது.
இந்த மீளாய்வின் பின்னர் இரண்டாவது கடன் தவணையை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.