ரஷ்ய சரக்கு விமானம் கனடா அரசாங்கம் வசமானது!

டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் ஒரு வருடத்திற்கு முன்னர் தரையிறக்கப்பட்ட ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட சரக்கு விமானம் கனடா அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

அன்டோனோவ் 124 என்ற விமானம், வோல்கா-டினெப்ர் ஏர்லைன்ஸ் எல்எல்சி மற்றும் வோல்கா-டினெப்ர் குரூப் ஆகியவற்றின் துணை நிறுவனத்திற்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

இந்த விமானம் பிப்ரவரி 2022 முதல் டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய விமானம் ஆரம்பத்தில் சீனாவிலிருந்து அமெரிக்கா மற்றும் ரஷ்யா வழியாக டொராண்டோவை விட்டு வெளியேறத் திட்டமிட்டது.

ஆனால் கனேடிய அரசாங்கம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரஷ்ய விமான இயக்குநர்களுக்கு நாட்டின் வான்வெளியை மூடியதால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.

விமானத்தின் உரிமையாளருக்கு டொராண்டோ பியர்சனில் நிறுத்த நிமிடத்திற்கு 74 சென்ட் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிரான தனது போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கும் கனடா அரசாங்கத்தின் நடவடிக்கை திட்டத்தில், அதன் பொருளாதாரத்தை கஷ்டப்படுத்துவதன் மூலமும், போரைத் தூண்டும் வளங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் இந்த கைப்பற்றல் முதன்மையானது என கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த ஆட்சியின் கீழ் கனடாவால் கைப்பற்றப்பட்ட முதல் சொத்து இதுவாகும், மேலும் சிறப்பு பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் கைப்பற்றப்பட்ட இரண்டாவது சொத்து இதுவாகும்.

கனேடிய அரசாங்கம் கூட்டாட்சி சட்டத்தின்படி கைப்பற்றுதலை நிர்வகிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *