பழம்பெரும் இந்தி நடிகை காலமானார்!
பழம்பெரும் இந்தி நடிகை சுலோச்சனா லட்கர் காலமானார். அவருக்கு வயது 94.
கடந்த சிலகாலமாக வயது மூப்பு தொடர்பான பிரச்சின்னைகளால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த மூன்று வாரங்களுக்கும் முன்பு, உடல்நிலை மோசமடையவே, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் உதவியுடம் சிகிச்சை பெற்று வந்த சுலோச்சனா, நேற்று (ஜூன் 04) மாலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.