நீரை கவனமாக பயன்படுத்த கோரிக்கை!
நீர்த்தேவை அதிகரித்துள்ளதால், நீரை கவனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நுகர்வோரை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலைமையினால் நீர் விநியோகத்தின் அழுத்தம் குறைவடையலாம் அல்லது நீர் விநியோகம் தடைபடலாம் எனவே நீரை சேகரித்து பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவிக்கின்றது.