நடிப்பதற்காக கூட்டு குடும்பத்தைப் பிரிந்த ஜோதிகா மன உளைச்சலில் சிவகுமார்!

திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டாம் என சொன்ன மாமனாரை ஜோதிகா மதிக்காமல் போனதால் மன உளைச்சலுக்கு ஆளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ஜோதிகா. இவர் பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்.

தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யாவை கடந்த 2006ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு இடைவெளி விட்டிருந்த ஜோதிகா 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்தார். தொடர்ந்தும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.

மன உளைச்சலில் சிவக்குமார்
நடிகர் சிவக்குமார் தன் மகன் சூர்யாவுக்கு தன் விருப்பப்படி ஒரு பெண்ணைத் தான் திருமணம் செய்துக் கொடுக்க இருந்தாராம்.

ஆனால் சூர்யா ஜோதிகாவை காதலித்து விட்டதால் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விட்டாராம். அதனால் தான் தன் இளைய மகன் தன்னுடைய விருப்பப்படி பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்தாராம். அதனை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்திருக்கிறார்.

ஆனால் ஜோதிகாவை திருமணத்திற்குப் பிறகு நடிக்கவேண்டாம் என்று கூறியிருக்கிறார். அதனால் கொஞ்ச நாள் சினிமா பக்கம் வராமல் இருந்த ஜோதிகா சூர்யாவிடம் அனுமதி கேட்டு மீண்டும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இது சிவக்குமாருக்கு பிடிக்காத காரணத்தால் தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மும்பைக் சென்று விட்டாராம் ஜோதிகா. இதனால் சிவக்குமார் கடும் மனஉளைச்சலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *