தண்ணீர் பயன்பாட்டால் ஆபத்தை நோக்கி நகரும் உலகம்!
உலகெங்கும் ஆபத்தை எதிர்நோக்குவதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மனிதர்களின் உயிர்நாடியாகக் கருதப்படும் தண்ணீர் தொடர்பிலேயே உலகம் ஆபத்தான நிலையில் செல்வதாக குறிப்பிடப்படுகின்றது.
நீடித்த நிலைத்தன்மையற்ற தண்ணீர்ப் பயன்பாடு, தூய்மைக்கேடு, உலகின் அதிகரிக்கும் வெப்பநிலை ஆகியவற்றால் தண்ணீர் பெரிதளவில் பாதிக்கப்படுவதாக நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
உலகம் கண்மூடித்தனமான, ஆபத்தான பாதையில் செல்வதாக அவர் குறிப்பிட்டார்.
எதுவும் செய்யவில்லை என்றால், உலகில் தொடர்ந்து சுமார் 25 சதவீதத்தினருக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்காது என்று அறிக்கையின் முதன்மை எழுத்தாளர் Richard Connor குறிப்பிட்டார்.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தண்ணீர் மாநாடு நியூயார்க் நகரில் நேற்று நடைபெற்றுள்ளது.
அதில் உலகம் முழுவதிலிருந்து சுமார் 6,500 பேர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தகைய மாநாடு கடைசியாக 1977ஆம் ஆண்டு அர்ஜென்ட்டினாவில் நடைபெற்றது.