இலங்கை பாதுகாப்புப் படையினர் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!
இலங்கை பாதுகாப்பு படை உறுப்பினர்களுக்கு 10,000 வேலை வாய்ப்பு ஒதுக்கீட்டை மலேசிய அரசாங்கம் வழங்கியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கலாகவே இந்த புதிய தொழில் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.