4 வயதுச் சகோதரியை சுட்டுக்கொன்ற 3 வயதுச் சிறுமிAll

4 வயதுச் சகோதரியை சுட்டுக்கொன்ற 3 வயதுச் சிறுமி

அமெரிக்காவில் 3 வயதுச் சிறுமி அவரின் 4 வயதுச் சகோதரியைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக அந்நாட்டுக் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

டெக்சஸ் (Texas) மாநிலத்தில் உள்ள ஹியூஸ்டன் (Houston) நகரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் 5 நபர்களும் இரு பிள்ளைகளும் அடுக்குமாடி வீட்டில் இருந்தனர்.

பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, இரு பிள்ளைகளும் படுக்கையறையில் தனியாக இருந்தனர்.

அப்போது துப்பாக்கிச் சத்தம் கேட்டது. விரைந்துசென்று பார்த்தபோது, 4 வயதுச் சிறுமி சுய நினைவின்றித் தரையில் கிடந்தார்.

இதுபோன்ற சூழல்களில் துப்பாக்கியைப் பாதுகாப்பாக வைக்கத் தவறிய குற்றச்சாட்டை ஒருவர் எதிர்கொள்ள நேரிடலாம் என்று பொலிஸ் அதிகாரி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *