டில்லியில் நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தானில் இன்று 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் டில்லி-என்சிஆர் பகுதியில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 7.55 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய தலைநகரில் ஒரு வாரத்தில் நிலநடுக்கம் உணரப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
ஜனவரி 1ம் திகதி, அதிகாலை 1.19 மணியளவில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தின் மையம் ஹரியானா மாநிலம் ஜஜ்ஜரில் இருந்ததாகவும், அதன் ஆழம் தரையில் இருந்து 5 கி.மீ ஆழத்தில் இருந்ததாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
டில்லி நில அதிர்வு மண்டலங்கள் 4-ன் கீழ் உள்ளது, இது நிலநடுக்க அபாயம் அதிகம். வெள்ளிக்கிழமை, மணிப்பூரின் உக்ருல் பகுதியில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது மண்டலம் 4க்கு உட்பட்டது.